புதுடெல்லி: “இண்டியா கூட்டணியின் ஒற்றுமை அப்படியே இருக்கிறதா என்பது குறித்து எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. ஆனால், அதன் எதிர்காலம் பிரகாசமாக இல்லை.” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சல்மான் குர்ஷித் மற்றும் மிருதுஞ்சய் சிங் ஆகியோர் எழுதிய ‘கன்டெஸ்டிங் டெமாக்ரட்டிக் டெஃபிசிட்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் வியாழக்கிழமை கலந்து கொண்டு பேசிய ப.சிதம்பரம் கூறியதாவது: மிருதுஞ்சய் சிங் சொன்னது போல (இண்டியா கூட்டணி) எதிர்காலம் பிரகாசமாக இல்லை. அந்தக் கூட்டணி இன்னும் அப்படியே இருக்கிறது என அவர் நினைப்பதாகத் தோன்றுகிறது. எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. இதற்கு சல்மான் குர்ஷித் தான் பதில் சொல்ல வேண்டும். ஏனெனில், இண்டியா கூட்டணிக்கான பேச்சுவார்த்தை குழுவில் அவரும் இடம்பெற்றிருந்தார். கூட்டணி இன்னும் நிலைத்திருந்தால் நான் மகிழ்ச்சியடைவேன்.