புதுடெல்லி: குஜராத் மாநிலம் ஜாம்நகரில், ரிலையன்ஸ் குழுமத்தின் வன உயிரின பாதுகாப்பு, மீட்பு, மறுவாழ்வு நிலையமான ‘வன்தாரா’வை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து வியந்து பாராட்டினார்.
ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் முயற்சியில், 3,000 ஏக்கர் பரப்பளவில் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட யானைகள் மற்றும் வனவிலங்குகளின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மீட்பு மையமான இங்கு, விலங்குகளுக்கு சரணாலயம், மறுவாழ்வு மற்றும் மருத்துவ பராமரிப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன.