மதுவால் ஏற்படும் துன்பத்தில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குரல் கொடுத்துள்ளார்.
“தமிழக இளைஞர்கள் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் இளைஞர்கள் குடியால் பாதிக்கப்படக் கூடாது. மது ஒழிப்புக் கொள்கையை தேசியக் கொள்கையாக மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். மகாத்மாவை தேசத் தந்தையாக ஏற்றுக் கொண்டுள்ள நாம், அவரது உயிர்மூச்சு கொள்கையான மதுவிலக்கை பொருட்படுத்துவதில்லை. தமிழக அரசு மட்டுமல்ல மற்ற மாநில அரசுகளும் மதுவை வருமானத்துக்கான வழியாகவே பார்க்கின்றன. யார் கெட்டுப் போனால் நமக்கென்ன என்ற அலட்சியப் போக்கே இதற்கு காரணம். இளைஞர்கள் பலர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி வாழ்க்கையை பாழாக்கி வருகின்றனர்” என்று தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.