கடந்த ஐபிஎல் சீசனில் தொடங்கிய ஆக்ரோஷமான பேட்டிங் என்பது இந்த ஐபிஎல் சீசனிலும் எடுத்த எடுப்பிலேயே உச்சம் தொட்டுள்ளது. இதில் சிஎஸ்கே பேட்டிங் மட்டும்தான் ஓய்வு பெற்ற டாடிஸ் அணி போன்று லொட லொட வென்று கழன்று போய் கிடக்கிறது. மற்ற அணிகளின் பேட்டிங் புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டு வருகின்றன.
காகிசோ ரபாடா இப்படி ஒரேயடியாக பேட்டிங்குக்காக மட்டுமே ஒரு தொடர் நடத்தப்படுவதை கிரிக்கெட் என்று அழைக்க வேண்டாம், ‘பேட்டிங்’ என்று அழையுங்கள் என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். முதல் 5 போட்டிகள் முடிவடைந்த நிலையிலேயே கடந்த ஐபிஎல் சீசனில் இதே பகுதியில் 87 சிக்ஸர்களாக இருந்தது இப்போது 119 ஆக அதிகரித்துள்ளது பவுண்டரிகளின் எண்ணிக்கையும் 34% அதிகரித்துள்ளதாக கிரிக் இன்போ புள்ளி விவரங்கள் கூறுகின்றன.