மான்செஸ்டர்: இங்கிலாந்து அணி உடனான 4-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்தது. இந்தப் போட்டியில் கடைசி செஷனில் ஆட்டத்தில் எந்த அணியும் வெற்றி பெற வாய்ப்பில்லை என்ற சூழலில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ‘ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம்’ என சொல்லி இந்திய வீரர்களுடன் பரஸ்பரம் ஹேண்ட் ஷேக் செய்ய முயன்றார். ஆனால், அதற்கு ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் மறுத்துவிட்டனர்.
மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இந்த ஆட்டம் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை நெருக்கடியுடன் எதிர்கொண்டது இந்தியா. இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது.