ஜெய்ஸ்வாலின் 2-வது இன்னிங்ஸ் சதம், ஜடேஜாவின் அரைசதம் அனைத்திற்கும் மேலாக வாஷிங்டன் சுந்தரின் கடைசி நேர பெரிய சிக்ஸர்கள் மூலம் கிடைத்த 39 ரன்கள் எல்லாவற்றிற்கும் மேலாக நேற்றைய ‘உதய சூரியன்’ பந்தயத்தின் ‘வெற்றிக் குதிரை’ சிராஜின் போர்க்குணம் மற்றும் விடாமுயற்சி, வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற உறுதி கொண்ட மனத்திடம் ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி தொடரை டெஸ்ட் தொடர் வரலாற்றின் ஆகச்சிறந்த தொடராக மாற்றியது.
இந்நிலையில், பாஸ்பால் என்று பிரெண்டன் மெக்கல்லம் செல்லப்பெயர் கொண்டு அழைக்கப்படும் இங்கிலாந்தின் அணுகுமுறை அவர்களுக்கு மீண்டுமொரு முறை இந்திய அணிக்கு எதிராக தொடரை வெல்லும் பாக்கியத்தை அளிக்கவில்லை என்பதுதான் உண்மை. அதை மெக்கல்லம் ஒப்புக் கொண்டார் என்பதை விட இந்திய அணி கடுமையாக இந்தத் தொடரில் ஆடும் என்பதைப் பற்றி முன்கூட்டியே அறிந்திருந்தோம் என்று கூறியதோடு முகமது சிராஜின் கேரக்டரை வெகுவாகப் பாராட்டினார்: