புதுடெல்லி: மத்தியில் அதிகாரக் குவிப்பு (centralisation), வணிகமயமாக்கல் (commercialisation), வகுப்புவாதமயமாக்கல் (communalisation) ஆகிய மூன்றும் இந்தியக் கல்வி முறையை வேட்டையாடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.
நமது நாட்டின் கல்வி முறை தொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் விவரம்: இந்திய கல்வியை C-கள் வேட்டையாடுகின்றன. ஒன்று, கல்வி பொதுப்பட்டியலில் இருந்தாலும் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும் நோக்கில் (centralisation) நடவடிக்கைகளை எடுப்பது, கல்வியை தனியார்மயமாக்குவது மற்றும் வணிகமயமாக்குவது (commercialisation), பாடப் புத்தகங்கள் மற்றும் நிறுவனங்களை வகுப்புவாதமயமாக்குவது (communalisation) ஆகியவற்றில்தான் நரேந்திர மோடி அரசு கவனம் செலுத்துகிறது. இந்த மூன்று C-கள் மூலம் இந்தியாவின் பொதுக் கல்வி வேட்டையாடப்படுவது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.