புதுடெல்லி: அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் நாடுகடத்தப்பட்ட விவகாரத்தால் நாடாளுன்ற இரு அவைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மதியம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் விளக்கம் அளிக்க உள்ளார்.
அமெரிக்க ராணுவ விமானத்தில் இந்தியர்கள் கைகளில் விலங்கிடப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் கொண்டுவரப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளே அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. அவைக்கு வெளியேயும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.