இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிராக, மும்பை தாக்குதல் தீவிரவாதி தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
மும்பை தீவிரவாத தாக்குதலில் அமெரிக்க குடியுரிமை பெற்ற பாகிஸ்தானியர் தஹாவூர் ராணாவுக்கு (64) தொடர்ப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் லஷ்கர் -இ-தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லியுடன் இணைந்து மும்பை தாக்குதலில் சதி செய்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் இருக்கும் இவரை, விசாரணைக்காக ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்காவிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்திருந்தது.