சென்னை: இந்தியாவின் நேரடி வரி வருவாயில் 4-வது பெரிய பங்களிப்பாளராக தமிழகம் திகழ்வதாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் பிரீத்தி கர்க் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை சார்பில் 166-வது வருமான வரி தின விழா கொண்டாட்டம் சென்னை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் சவுமியா சுவாமிநாதன் தலைமை வகித்து 2024-25 நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரி அதிகாரிகளுக்கு விருதுகளை வழங்கினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை யின் முதன்மை தலைமை ஆணையர் பிரீத்தி கர்க் முன் விலை வகித்தார்.