புதுடெல்லி: இந்தியாவின் வளர்ச்சியில் இணைய வேண்டும் என உலகளாவிய நிறுவனங்களின் சிஇஓ-க்களுடன் நடைபெற்ற சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். அவர் உலகளாவிய நிறுவனங்களின் சிஇஓ-க்களை தனித்தனியாக சந்தித்து பேசினார். டூரிங் நிறுவனத்தின் சிஇஓ ஜொனாதன் சித்தார்த் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு புரட்சியில் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டும் எனவும், இதற்காக இந்தியாவுடன் இணைந்து செயல்படுவது பற்றி விவரித்தார்.