சென்னை : சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், “வனக்காவலர்கள் நியமன ஆணைகளை வழங்கியதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள்தான் காடுகளின் முதுகெலும்பு; நமது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஹீரோக்கள் நீங்கள்தான். தமிழ்நாடு பசுமை இயக்கம் மூலம் 10 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.இந்தியாவிலேயே அதிகஅளவிலான ராம்சார் இடங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு”இவ்வாறு தெரிவித்தார்.
The post இந்தியாவிலேயே அதிகஅளவிலான ராம்சார் இடங்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.