சென்னை: இந்தியாவில் தற்போது அமைந்துள்ள ஆப்பிள் நிறுவன உற்பத்தி கூடங்களும், விரைவில் அமையவுள்ள புதிய உற்பத்தி கூடங்களும் இந்தியா மற்றும் அமெரிக்க சந்தையில் ஐபோன்களுக்கு உள்ள விநியோக ரீதியான டிமாண்டை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில்தான் இந்தியாவில் ஆப்பிளின் உற்பத்தி சார்ந்த கட்டமைப்பை தான் விரும்பவில்லை என அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் வசம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேரடியாக தெரிவித்தார்.
ட்ரம்ப்பின் இந்த பேச்சு இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி கட்டமைப்பு மற்றும் அது சார்ந்த திட்டங்களை பாதிக்க செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.