மும்பை: இந்தியாவில் டெஸ்லா நிறுவன ஷோரூம் திறப்பு விழா மும்பையில் ஜரூராக நடைபெற்றது. இதன்மூலம் தனது வணிக தடத்தை தொழிலதிபர் எலான் மஸ்க் இந்தியாவில் தொடங்கியுள்ளார். ‘ஒய்’ மாடல் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் டெஸ்லா நிறுவனம், உலகம் முழுவதும் மின்சார வாகன விற்பனையை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2003-ல் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் சிஇஓ-வாக எலான் மஸ்க் இயங்கி வருகிறார். தற்போது சந்தையில் பல்வேறு மாடல் கார்களை டெஸ்லா விற்பனை செய்து வருகிறது. உலகின் பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய விரும்பும். மஸ்க்கும் அப்படித்தான். தனது டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய வணிகத்தை இங்கு நிறுவும் முயற்சியை மேற்கொண்டார். இதில் அவரது டெஸ்லா கனவு இப்போது பலித்துள்ளது.