புதுடெல்லி: இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய சவுதி அரேபியா முடிவு செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஏப். 22) சவுதி அரேபியாவுக்குச் சென்றார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து அவர் தனது இரண்டு நாள் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு இன்று அதிகாலை தாயகம் வந்தடைந்தார்.