இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்திருக்கும் கோடீஸ்வரர்கள் 191 பேராக உயர்ந்துள்ளனர் என்று நைட் ஃபிராங்க் அமைப்பு புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது.
உலகளாவிய கோடீஸ்வரர்கள், சொத்து விவரங்களை வெளியிடும் நைட் ஃபிராங்க் அமைப்பு அண்மையில், 2025-ம் ஆண்டுக்கான சொத்து அறிக்கையை வெளியிட்டது. இதில் இந்தியாவில் 191 பேர் 100 கோடிக்கும் அதிகமாக சொத்துகளை வைத்துள்ளனர் என்றும், 2024-ல் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 6 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.