மாஸ்கோ: இந்தியாவுக்கு கூடுதலாக எஸ்-400 ஏவுகணைகள் வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்து வருவதாக ரஷ்ய ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் டிமிட்ரி சுகாயேவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை 5.4 பில்லியன் டாலருக்கு வாங்க இந்தியா கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. அதன்படி இந்தியாவுக்கு வழங்கப்பட்ட எஸ்-400 ஏவுகணைகளும், உள்நாட்டு தயாரிப்பு வான் பாதுகாப்பு ஏவுகணைகளும் இணைந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டன. இவை, பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை நடுவானில் அழித்தன. இதனால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.