இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதிய சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு சூதாட்டம் நடந்ததாக தெரியவந்துள்ளது.
வழக்கமாக கிரிக்கெட் இறுதிப் போட்டிகள் நடைபெறும்போது சூதாட்டங்களில் தரகர்கள் ஈடுபடுவது வழக்கம். அதன்படி துபாயில் நடைபெற்ற இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது அதிக அளவில் சூதாட்டங்கள் நடைபெற்றதாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக என்டிடிவி வெளியிட்டுள்ள செய்தியில், நிழல் உலக தாதாக்கள் முதல் தொழிலதிபர்கள் வரை இந்த சர்வதேச சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு தரகரும் கோடிக்கணக்கில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.