புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிக்குத் தடை கோரிய மனுவை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஊர்வசி ஜெயின் உள்ளிட்ட சட்டக் கல்லூரியை சேர்ந்த 4 மாணவர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவில், கிரிக்கெட் என்பது இரு நாடுகளுக்கு இடையே நட்பையும், இணக்கத்தையும் வெளிப்படுத்துவதாகும். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவது படை வீரர்கள், பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியான உறவினர்களின் மன உறுதியை குலைக்கும்.