மாஸ்கோ: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் தொலைபேசி மூலமாக நேற்று முன்தினம் உரையாடினார்கள். இந்த உரையாடலின்போது இரு நாட்டு தலைவர்களும் உக்ரைன் விவகாரம் குறித்து பேசினார்கள். மேலும் வேறு சில விவகாரங்கள் குறித்தும் டிரம்ப் மற்றும் புடின் பேசியுள்ளனர். குறிப்பாக இந்தியா -பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து இருவரும் விவாதித்துள்ளனர். இது குறித்து புடினின் உதவியாளர் பூரி உஷாகோவ் கூறுகையில், ‘‘இரு நாட்டின் தலைவர்களும் மத்திய கிழக்கு மற்றும் அதிபர் டிரம்பின் பங்கேற்பினால் நிறுத்தப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆயுத மோதல் விவகாரம் குறித்து உரையாடினார்கள்” என்றார்.
புடின் தலையிட பாக். வலியுறுத்தல்: இந்தியாவுடனான மோதலை தீர்ப்பதற்கு உதவுமாறு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிபர் புடினை வலியுறுத்தி இருப்பதாக பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு உதவியாளர் சையத் தாரிக் தெரிவித்துள்ளார். பிரதமரின் கடிதத்தை ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் லாவ்ரோவிடம் கொடுத்துள்ளார்.
The post இந்தியா-பாக். மோதல் குறித்து புடின், டிரம்ப் போனில் பேச்சு appeared first on Dinakaran.