சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் காணச் சகிக்க முடியாத அளவுக்கு விளையாட்டில் அரசியல் கலந்திருந்தது என்று முன்னாள் விக்கெட் கீப்பர் 1983 உலகக் கோப்பை நாயகர் சையத் கிர்மானி வேதனை தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இரு அணி வீரர்களுமே முரட்டுத்தனமாகவும் திமிரெடுத்தும் நடந்து கொண்டனர் என்று சையத் கிர்மானி சாடியுள்ளார். அதாவது தற்கால கிரிக்கெட் ஆடப்படும் விதம் தனக்கு மிகவும் மனச்சோர்வையும் கவலையையும் அளிப்பதாக இருக்கிறது என்கிறார் சையத் கிர்மானி.