உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் பழம்பெரும் கல்வி நிறுவனமான பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. இதன் வளாகத்தில் இந்திய பொருளாதார அளவீட்டு சங்கத்தின் 59-வது மாநாடு நடைபெற்றது.
இதில் முக்கிய விருந்தினராக பங்கேற்ற மத்திய அரசின் நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி பேசியதாவது: நாடு முழுவதும் உள்ள நகரங்களில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து நவீன வளர்ச்சியை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு வாராணசியின் வளர்ச்சி ஒரு முன்மாதிரியாக இருக்கும். இதன் வளர்ச்சியைப் பின்பற்றி இதர நகரங்களிலும் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்தினால், இந்தியா 2047-க்குள் வளர்ந்த நாடாக மாறும்.