நியூயார்க்: அமெரிக்கப் பொருட்களுக்கான 100% வரிகளைக் குறைக்க இந்தியா தயாராக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். புது டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஏற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஃபாக்ஸ் நியூஸுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அளித்த பேட்டியில், “இந்தியா உலகின் மிக உயர்ந்த வரிகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று. அவர்கள் வணிகம் செய்வதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குகிறார்கள். அமெரிக்காவுக்கான தங்கள் வரிகளில் 100 சதவீதத்தைக் குறைக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என ட்ரம்ப் கூறினார்.