இங்கிலாந்து அணிக்கு எதிராக லீட்ஸ் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 371 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி எந்தவித நெருக்கடியும் இல்லாமல் எளிதாக இலக்கை விரட்டி வெற்றி கண்டது.
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் சிறந்த பங்களிப்பை வழங்கினர். ரிஷப் பந்த் இரண்டு ஆக்கப்பூர்வமான சதங்களை அடித்தார். தொடக்க வீரர்கள் (யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல்) ஒவ்வொரு இன்னிங்ஸிலும் சிறந்த சதத்தை அடித்தனர். கேப்டனாக கில்லும் தனது பங்குக்கு ஒரு சதத்தை விளாசினார்.