புதுடெல்லி: மத்திய அரசின் அதிரடி நடவடிக்கையால், இந்திய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக, துருக்கியின் செலிபி நிறுவன பங்குகள் 20 சதவீதம் வரை சரிந்தன.
இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் சேவை, சரக்கு சேவை உள்ளிட்ட பணிகளை துருக்கியை சேர்ந்த செலிபி ஏவியேஷன் நிறுவனம் கையாண்டு வந்தது. இந்தியா – பாகிஸ்தான் இடையே அண்மையில் நடைபெற்ற போரின்போது பாகிஸ்தானுக்கு துருக்கி நேரடியாக ஆதரவு அளித்தது. துருக்கியின் அதிநவீன ட்ரோன்கள் மூலம் இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.