நாக்பூர்: “ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம்) இந்தியாவின் அழிவில்லாத கலாச்சாரம் மற்றும் நவீனமயமாக்கலின் ஆலமரம்” என்று நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் நிறுவனர்களான கேசவ் பலிராம் ஹெட்கேவர், எம்.எஸ்.கோல்வாக்கர் ஆகியோரின் நினைவிடம் இருக்கும் டாக்டர் ஹெட்கேவர் ஸ்ம்ருதி மந்திருக்குச் சென்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்பு அங்கு மாதவ் நேத்ராலயா பிரிமீயம் மையத்துக்கு அடிக்கல் நாட்டினார். நரேந்திர மோடி பிரதமரான பின்னர் ஆர்எஸ்எஸ் மையத்துக்குச் செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.