எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், அது குறித்து தனது கருத்தை முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக்கேல் வான் பகிர்ந்துள்ளார்.
“ஷுப்மன் கில் இப்போதைக்கு கேப்டன் வீரர் அல்ல. ஆகவே அவரை துணைக் கேப்டனாக நியமிக்கலாம்” என்று மைக்கேல் வான் பரிந்துரைத்துள்ளார். அவர் தன் எக்ஸ் தள பதிவில், “இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பொறுப்பு என்னிடம் இருந்தால் ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக இருக்கலாம் என்று கருதுவேன்” என கூறியுள்ளார். இந்திய அணியின் கேப்டனாக அந்த ட்வீட்டில் கோலியை அவர் பரிந்துரைத்திருந்தார். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.