ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மாநில அமைச்சர் ஒருவர், இந்திரா காந்தி குறித்து தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மூன்றாவது நளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜஸ்தானில் தற்போது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பேரவையில் கேள்வி நேரத்தின் போது சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் அவினாஷ் கெலாட் பேசினார். அப்போது, ‘கடந்த 2023 -24 பட்ஜெட்டில் கூட நீங்கள் (காங்கிரஸ்) வழக்கம் போல் உங்கள் பாட்டி இந்திரா காந்தியின் பெயரையே அனைத்து திட்டங்களுக்கும் சூட்டினீர்கள்’ என்று கூறினார்.