சென்னை: ‘இந்தி திணிப்பை கைவிட வேண்டும் என்பதே பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 72-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் அண்ணா, முன்னாள் முதல்வரும் தனது தந்தையுமான கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.