திருப்பத்தூர்: “இந்தி படித்தவர்கள் யாசகம் எடுப்பவர்களாகவும், தமிழர்கள் யாசகம் இடுபவர்களாகவும் உள்ளனர்” என கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “இந்தியை படிக்கவில்லை என்றால் யாசகம் எடுக்க கூட முடியாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ஆனால், இந்தி படித்தவர்கள், இந்தி தெரிந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் யாசகம் எடுப்பவர்களாகவும், தமிழர்கள் யாசகம் இடுபவர்களாகவும் உள்ளனர்.