புதுடெல்லி: பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலம் கன்ஞ் மாவட்டத்தின் சத்தர்பூரில் உள்ளது கதா கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற ‘பாகேஷ்வர் தாம்’ எனும் அனுமர் கோயில் உள்ளது.
இதன் தலைமை அர்ச்சகர் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி, பாகேஷ்வர் தாம் ஜன்சேவா சமிதி என்ற சமூக நல அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இந்த அமைப்பின் சார்பில் கோயிலுக்கு அருகில் உள்ள பரந்த பகுதியில் ஒரு இந்து கிராமத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் பூமி பூஜை செய்து கட்டிட வேலைகளையும் தொடங்கி வைத்துள்ளார்.