புதுடெல்லி: சீனாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் கழிவறையை பயன்படுத்த நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, கழிவறையை ஒருமுறை பயன்படுத்த 2 நிமிடம் மட்டுமே ஊழியர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு சீனாவில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் போஷான் நகரில் ‘த்ரீ பிரதர்ஸ் மெஷின் மேனுஃபேக்சுரின் கம்பெனி’ என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் கழிவறையை பயன்படுத்த நேரக் கட்டுப்பாடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது, கடந்த பிப்ரவரி 11-ம் தேதி, ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்தவும், ஒழுக்கத்தை கடைபிடிக்கவும் இந்த புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.