சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல அலுவலகம் (இபிஎஃப்ஓ) சார்பில், ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ (நிதி ஆப்கே நிகட் 2.0) என்ற குறைதீர்ப்பு முகாம் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று (மார்ச் 27) நடைபெறுகிறது.
இதில், முதலாளிகள், ஒப்பந்ததாரர்களுக்கான ஆன்லைன் சேவைகள் பற்றிய செயல்முறைகளை விளக்குதல், தொழிலாளர்களுக்கான ஆன்லைன் சேவைகள் விளக்குதல், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல், புதிய முயற்சிகள், சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும்.