இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் வேளாண் மாணவருக்கு தங்கப் பதக்கத்துடன் கூடிய நம்மாழ்வார் விருது இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் என்று உலக சுற்றுச்சூழல் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்தார்.
தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறியபோது நாம் ஏழைகளாக இருந்தோம். உணவுப் பற்றாக்குறை நிலவியது. ஆனால், ஆங்கிலேயர்வருகைக்கு முன்பு ஒருபோதும் உணவுப் பற்றாக்குறை இருந்ததில்லை.