சென்னை: “இரண்டாம் நிலை நகரங்களில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து துறைக்கான தீர்வாக கோவை, மதுரை, சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் துரித போக்குவரத்து அமைப்புகளை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த விவரங்கள் திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை கொள்கை விளக்க குறிப்பில் இடம்பெற்றுள்ளன.
இதுதொடர்பாக திட்டம், வளர்ச்சி, மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்பதாவது: “இரண்டாம் நிலை நகரங்களில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து துறைக்கான தீர்வாக கோவை, மதுரை, சேலம், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் துரித போக்குவரத்து அமைப்புகளை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை தயாரிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது.