சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 9 ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளை குறைத்துவிட்டு, அதற்குப் பதிலாக மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகளை சேர்க்கப் போவதாக சமீபத்தில் தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு ரயில் பயணிகள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, திருநெல்வேலி வரை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் செங்கோட்டை வரை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான பெட்டிகள் குறைப்பு உத்தரவு மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை அனைவரும் வரவேற்றாலும் மற்ற ரயில்களிலும் தூங்கும் வசதி பெட்டிகளுக்குப் பதிலாக மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகளைச் சேர்க்கும் உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.