டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சாலைகளில் வாகன ஒலிப்பான்களுக்கு தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்போவதாகவும், தற்போதைய ‘ஹார்ன்’ ஒலிக்குப் பதில் புல்லாங்குழல், தபேலா, வயலின், ஹார்மோனியம் இசையை ஒலிக்கச் செய்யும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
தற்போதைய நகரமயமாக்கல் சூழ்நிலையில், வாகனங்களின் இரைச்சல் மற்றும் தொடர்ந்து காரணமே இல்லாமல், எரிச்சலூட்டும் வகையில் வாகனஓட்டிகள் ஒலி எழுப்பும் விதம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சலிப்படையவே வைக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், வாகனங்களின் ஒலிக்குப் பதில் இந்திய இசைக் கருவிகளின் இனிய இசை ஒலிக்கும் வகையில் மாற்றம் கொண்டு வரப் போவதாக மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பே காது குளிரும் இசையாக அமைந்துள்ளது.