சென்னை: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை ராமேசுவரம் மீனவப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர்.
இலங்கை கடற்படையினரால் கடந்த ஜனவரி முதல் 21 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு, 159 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 60 மீனவர்கள் தண்டனை மற்றும் விசாரணை கைதிகளாக யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.