அரியலூர்: இலங்கை வாழ் தமிழர்களுக்கு 10 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இலங்கை வாழ் தமிழர்கள் சுதந்திரமாக அவர்களது மண்ணில் வாழ இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிதம்பரம் எம்பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் காட்டத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (ஏப்.5) நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழாவில் சிதம்பரம் எம்.பி.யும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவருமான திருமாவளவன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இன்றைய நாளில் பிரதமர் இலங்கையில் இருக்கிற சூழலில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து காலம் காலமாக விடுத்து வருகிற கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.