உத்தமபாளையம்: சிம்பொனி மூலம் இசையில் உலக சாதனை செய்த இளையராஜாவை அவரது சொந்த கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். உள்ளூர் கோயில் திருவிழாவில் அவருக்கு பாராட்டி விழா நடத்தவும், சிறப்பிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் இளையராஜா லண்டனில் உள்ள ஈவன்டிம் அப்பல்லோ அரங்கத்தில் தனது வேலியன்ட் சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். இதன் மூலம் சர்வதே அளவில் சிம்பொனியை அரங்கேற்றிய ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும் துபாய், பாரீஸ், ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் சிம்பொனி இசை நிகழ்ச்சியையும் நடத்த உள்ளார்.