காசா: காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், தாய் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் உட்பட 4 இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் உடல்களை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஹமாஸ் இன்று ஒப்படைத்தது.
போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து இறந்தவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்படுவது இதுவே முதல்முறை. இறந்த பிணைக்கைதிகளின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகளை செஞ்சிலுவை சங்கத்தினர் இஸ்ரேலிடம் ஒப்படைத்தனர். அவர்களின் உடல்களை இஸ்ரேல் பெற்றுக்கொண்டதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் உறுதிபடுத்தியுள்ளது.