இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே வலுவடைந்துவரும் போர், உலகில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அணுசக்தியை மையமாகக் கொண்ட மோதல் என்பதால், மேற்கு ஆசியாவைத் தாண்டி – இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியிருக்கிறது.
ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதைத் தடைசெய்வதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஈரான் அணு ஒப்பந்தம், ஒபாமா ஆட்சிக் காலத்தில் 2015இல் கையெழுத்தானது. ஆனால், 2018இல் இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அப்போதைய அதிபர் டிரம்ப் அறிவித்தார்.