இஸ்லாமாபாத்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுடன் பாகிஸ்தானை இணைப்பதற்காக இந்தியா கூறும் குற்றச்சாட்டு மற்றும் முயற்சிகளை நிராகரித்து அந்நாட்டு செனட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீர் பயங்கரவாதம் அல்லது ராணுவ ஆத்திரமூட்டல் உள்ளிட்ட எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் எதிராக அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கு பாகிஸ்தான் முழு திறனுடன் தயாராக உள்ளது. பாகிஸ்தான் அரசை அவமதிப்பதற்காக இந்திய அரசின் திட்டமிட்ட பிரசாரத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகின்றது” என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post இஸ்லாமாபாத்தை தொடர்புபடுத்தும் இந்தியாவின் குற்றச்சாட்டு நிராகரிப்பு: பாக். செனட்டில் தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.