இஸ்ரேலுடன் தொடர்புடைய ஹேக்கர்கள் ஈரானின் மிகப் பெரிய கிரிப்டோ கரன்சி பரிமாற்ற நிறுவனமான நோபிடெக்ஸில் இருந்து 90 மில்லியன் டாலர்களை திருடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.780 கோடியாகும்.
இதுகுறித்து பிளாக்செயின் பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்ட தகவல்: நோபிடெக்ஸ் கிரிப்டோகரன்சி திருட்டுக்கு பொறுப்பேற்றுள்ள ஹேக்கர்கள் குழு, “நோபிடெக்ஸில் எஞ்சியிருக்கும் சொத்துகள் இப்போது முழுமையாக பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன” என்று அதன் டெலிகிராம் கணக்கில் தெரிவித்துள்ளது.