புதுடெல்லி: சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக எஸ்சிஓ கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
இப்போதைய சூழலுக்கு ஏற்ப ஐ.நா. சபையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். குறிப்பாக ஐ.நா.வின் ஆட்சி மன்ற அமைப்புகளில் வளரும் நாடுகளுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கொள்கையை எஸ்சிஓ அமைப்பு பின்பற்றுகிறது. உலகத்தின் நன்மைக்காக எஸ்சிஓ பாடுபடும். தீவிரவாதம், பிரிவினைவாதம், போதைப் பொருள் கடத்தல், ஆயுத கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்படும்.