ஈரோடு: ஈரோடு அருகே ஓடையில் கழிவுநீரை வெளியேற்றிய ஆலையின் மின் இணைப்பை துண்டிக்க மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் ஆர்.கே.ஸ்டீல்ஸ் கழிவுநீரை லாரியில் கொண்டுவந்து ஓடையில் கலந்தது அம்பலமானது. கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். ஆய்வின் அடிப்படையில் ஆலையின் மின் இணைப்பை துண்டிக்க மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டது.
The post ஈரோடு அருகே ஆலையின் மின் இணைப்பை துண்டிக்க உத்தரவு..!! appeared first on Dinakaran.