ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, நாம் தமிழர் கட்சி மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 5-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில். பன்னீர் செல்வம் பூங்கா அருகேயுள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்து வரும் கிறிஸ்தவ மக்களிடம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வாக்கு சேகரித்தார்.