சென்னை : உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக விண்ணப்பம் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் ஜூலை 15 தொடங்க உள்ள நிலையில், 1 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக விண்ணப்பங்கள், தகவல் கையேடுகள் விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட 43 திட்டங்களுக்கான கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் விதமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் அரசுத் துறை சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் நோக்கமாகும்.
நகர்ப்புற பகுதிகளில் நடைபெற உள்ள 3,768 முகாம்களில் 13 துறைகளின் 43 சேவைகள் வழங்கப்பட உள்ளன. ஊரகப்படுத்திகளில் நடைபெற உள்ள 6,232 முகாம்களில் 15 துறைகளின் 46 சேவைகள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தின் கீழ் வரும் நவம்பர் வரை முகாம்கள் நடத்தப்பட உள்ள நிலையில், முதல் முகாமை வரும் 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் தொடங்கி வைக்க உள்ளார். கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தகுதியுள்ள விடுபட்டவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே விண்ணப்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. முகாம்களுக்கு வரும் மக்களுக்காக மருத்துவ முகாம்களும் நடத்தப்பட உள்ளன. சென்னையில் முதற்கட்டமாக 6 வார்டுகளில் இன்று விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
The post உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களுக்கு விண்ணப்பம் விநியோகம் தொடக்கம் : மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட 43 சேவைகளை வழங்க நடவடிக்கை!! appeared first on Dinakaran.