அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், அவர் அமைச்சராக பதவியில் தொடர விரும்புகிறாரா, இல்லையா என்பது குறித்து 10 நாட்களில் பதிலளிக்க வேண்டுமென இறுதி அவகாசம் வழங்கியுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்துடன் விளையாடக் கூடாது என செந்தில் பாலாஜி தரப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
செந்தில்பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் 14 அன்று கைது செய்தனர். 471 நாட்களுக்குப் பிறகு கடந்தாண்டு செப்.26-ல் நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீன் கிடைத்த ஒரு நாள் இடைவெளியில் அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார்.