ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புகழ்பெற்ற 127-வது மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி கோடை விழா கோத்தரி காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, 127-வது மலர்க் கண்காட்சி நேற்று தொடங்கியது.
கண்காட்சி வரும் 25-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் ஜெர்மனியம் சைக்ளோபின் பால்சம், புதிய ரக ஆர்னமெண்டல்கேல், ஓரியண்டல் லில்லி, பேன்சி மேரிகோல்டு, ஜினியா, டெல்முனியம் உள்ளிட்ட 275 வகையான, 7.5 லட்சம் மலர்ச் செடிகள் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும், மலர் மாடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 45 ஆயிரம் மலர்த் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.